MARC காட்சி

Back
தட்சிணாமூர்த்தி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a தட்சிணாமூர்த்தி
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a மணல் கல்
500 : _ _ |a தென்முகக் கடவுள் தனது உடன் கூட்டத்தாருக்கும், உயிர்குலத்தாருக்கும் கல்லால மரத்தின் கீழ் மறையோதிய நிலையில் அமர்வு
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி) கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளையும், ஆறங்கங்களையும் உயிர்க்குலத்திற்கு ஓதுவிக்கும் காட்சி. ஆலமர்ச்செல்வன் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். ஜடாபாரத்துடன் விளங்கும் நான்மறையோதி வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை குத்துக்காலிட்டு உடல் நேராகவும், அமர்வு நிலை ஒரு பக்கமாக சாய்த்தும் உள்ள நிலையில் அமர்ந்துள்ளார். இயல்பாக தென்முகக் கடவுள் அமரும் வீராசனத்தில் இருந்து இந்த அமர்வு நிலை வேறுபட்டுள்ளது. மறையோதி மாமுனியின் கைகள் இரண்டும் வியாக்கியான (வேதப்பொருளுரை) முத்திரை காட்டுகின்றன. பின்கைகள் தெரியவில்லை. வலது தோளை உயர்த்தி, முகத்தை ஏறிட்டவாறு வைத்துள்ளார். முகம் சற்று சிதைந்துள்ளது. முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழியே செல்கிறது. வேதவல்லானின் இருபுறமும் உள்ள பகுக்கப்பட்ட சிறு சிறு கோட்டங்களில் கின்னரர்களும், கந்தர்வர்களும், தொல்மாந்தர்களும், வேங்கையும், சிம்மமும் காட்டப்பட்டுள்ளனர். ஆலமரத்தில் காட்டப்படும் உயிரினங்கள் சிதைந்துள்ளன. அறியக்கூடவில்லை. மறையோதியின் இடையாடை முடிச்சுகள் ஆசனத்தில் வீழ்ந்துள்ளன. அருகிலுள்ள சிறுகோட்டங்களில் கீழ்ப்பகுதியில் நான்கு மனிதர்கள் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் பக்கத்திற்கு ஒரு முதியவரும் இளையவருமாய் நன்கு அணி செய்யப்பட்டவர்களாய், அரையாடை அணிந்து, ஒருவரைத் தவிர மற்ற மூவரும் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். ஒருவர் இடங்கருதி அரைமுழந்தாளிட்டு அமர்ந்துள்ளார். ஆலமர்ச்செல்வனின் வலப்புறம் உள்ளவர்கள் வலது தொடையில் வலது கையை வைத்தவாறும், இடது கை மலரைப் பிடிக்கும் முத்திரையிலும் வைத்துள்ளனர். இடப்புறம் உள்ளவர்கள் முன்னவர்களுக்கு மாற்றுப் பாணியில் கைகளை இயக்கியுள்ளனர். உயிர்க்குலம் அனைத்தும் ஒருங்கே கூடியுள்ள நிலையை இங்குக் காணமுடிகின்றது.
653 : _ _ |a தென்முகக்கடவுள், தட்சிணாமூர்த்தி, ஆலமர்ச்செல்வன், நான்மறையோதி, வேதவல்லான், மறையோதி, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம்
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
914 : _ _ |a 12.82824139
915 : _ _ |a 79.70781952
995 : _ _ |a TVA_SCL_000020
barcode : TVA_SCL_000020
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000020_முக்தேஸ்வரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-001.jpg